மணிரத்னத்தின் புதிய படம்


'காற்றுவெளியிடை' படத்துக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார் மணிரத்னம். அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'காற்றுவெளியிடை' படத்தில் நடித்த அதிதி ராவ், மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறுகிறார் கோலிவுட் கோவிந்து. பஞ்ச பாண்டவர்களின் கதையாக இருக்குமோ?

அரவிந்த்

© TamilOnline.com