ராகபாவம்: தியாகராஜ ஆராதனை
ஜனவரி 6, 2018 அன்று திருவையாற்றில் ஸ்ரீதியாராஜ ஆராதனை நடைபெற்ற அதே பகுளபஞ்சமி தினத்தன்று அட்லாண்டாவிலும் விமர்சையாக ஆராதனை கொண்டாடப்பட்டது. ராகபாவம் அமைப்பு இதை ஏற்பாடு செய்திருந்தது.

முதலில் ஷோபனா சந்தானம் பாட்டுடன் ஆரம்பித்தது. தொடர்ந்து அட்லாண்டா சகோதரிகளான ஸ்ரீவர்ஷினி, நித்யஸ்ரீ, சுமத்யுதி வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீநிதி பிரசாத் பாடினார்கள். பின்னர் தொடர்ந்தன பஞ்சரத்ன கிருதிகள். திருவாளர்கள் சேலம் ஸ்ரீராம், பிரசன்னா, பிரஷாந்த் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீராம் மற்றும் பலர் பாட இவர்களுடன் மிருதங்கம் மற்றும் வயலின் வித்வான்கள் சேர்ந்து வாசித்தார்கள். ஒருங்கிணைந்து இசைத்த பஞ்சரத்ன கிருதிகள் அனைவரையும் மெய்மறக்க செய்தது.

பத்மாமணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com