பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல
இப்பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல. ஏற்கனவே எழுதப்பட்டு காலங்காலமாய் நிலைத்து வரும் பாடலைப் பாடும்போது, அதுவும் பொருள்செலவில், நிறைய ஆள்கள் துணையுடன் பாடப்படும்போது தகுந்த கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற பிழைகளைக் களைவதில் இளையராசா தனக்கே உரித்தான ஞான முதிர்வுடன் இதைச் செய்ய வேண்டும். தருமியாக நின்றுவிடக் கூடாது.

திருவாசகப் பாடல்கள் ஒப்பற்ற, கிடைத்தற்கரிய தமிழ் பக்தி இலக்கியம் ஆகும். ஏதோ சாதாரண பாடகர் அல்லது இசையாசிரியர் தவறுகள் செய்தால் அது மக்களிடத்தில் நிலைக்காது. ஆனால் இளையராசா தமிழ்நாடு போற்றும் பெருமைப்படும் இசைச்சின்னம். இவர் செய்யும் நல்லதும் கெட்டதும் நிலைக்கக் கூடியவை.

நாக. இளங்கோவன்,
www.pathivukal.com

© TamilOnline.com