ATEA: செயற்கை அறிவு மற்றும் ஆழ்ந்து கற்றல்
நவம்பர் 18, 2017 அன்று அமெரிக்கத் தமிழ் முனைவோர் சங்கத்தின் சிலிகான் வேலி பிரிவு, செயற்கை அறிவு மற்றும் ஆழ்ந்து கற்றல் (AI & Deep Learning) மீதான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. Data Science and Machine Learning என்கிற பிரிவிலான உரைத்தொடரில் இது முதலாவதாகும். இதனை அப்ளைடு வென்ச்சர்ஸ், சான்ட க்ளாராவிலுள்ள அப்ளைடு மெடீரியல்ஸ் தலைமையகத்தில் வைத்து நடத்தியது.

டாக்டர் ரவி சிட்யாலா (Tensorflow அறிஞர்), மது ஐயர் (ஈதோஸ் லெண்டிங்கின் தலைமைத் தரவு அதிகாரி), மலைக்கண்ணன் சங்கரசுப்பு (VP of AI Research, Saama Technologies) ஆகியோர் சிறப்பான உரைகளை வழங்கினர். பிறகு நடைபெற்ற குழு விவாதத்தில் ராஜேஷ் சுவாமிநாதன் (Applied Ventures) பேரா. ராம் அகெல்லா (UCSC, Researcher, Machine Learning, Data and Text Mining) ராஜ் கவென்ராஜ் (CEO of 7 Senses, who is driving the convergence of AI and Education through Robot). சென்னையைச் சேர்ந்த பிரவீன் சேகர் (Torus), செயற்கை அறிவில் தமது நிறுவனம் செய்வது என்ன என்பதை விளக்கினார். சுமார் 125 பேர் இதில் பங்கேற்றனர்.

நர்ஸி கஸ்தூரி

© TamilOnline.com