குறள் 388
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் நடிகர் விஷ்ணு மஞ்சு நாயகனாகத் தமிழில் அறிமுகமாகும் படம் 'குறள் 388'. நாயகியாக சுரபி நடிக்கிறார். உடன் சம்பத் ராஜ், போசானி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். திரைக்கதை: கே.எல். பிரவீன். வசனம்: ரவிசங்கர். இசை: எஸ்.எஸ். தமன். எழுதி இயக்குகிறார் G.S. கார்த்தி. "திருக்குறளில் சொல்லப்படாத கருத்து எதுவுமே இல்லை. 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்' என்ற 388வது குறளின் கருத்துதான் படத்தின் கரு" என்கிறார் இயக்குனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது படம்.



அரவிந்த்

© TamilOnline.com