ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் கண்ணதாசன் விழா
மார்ச் 17, 2007 அன்று ஜாக்ஸன்வில் தமிழ் மன்றத்தின் சார்பில், கவியரசர் கண்ணதாசன் விழா, அவரது 80-வது பிறந்த நாளை யொட்டிக் கொண்டாடப்பட்டது. சொல்லின் செல்வி திருமதி உமையாள் முத்து அவர்கள் 'கவியரசர் பாடல்களில் இலக்கியம்' என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் சிறப்புரை யாற்றினார். கண்ணதாசனின் கவிதைகளைச் சொல்லி, பாடி, விளக்கிய தோடு, கருத்து களின் மூலமான சிலம்பு, சங்க இலக்கியங்கள், ஆத்திசூடி எனப் பல்வேறு இலக்கியங்களைப் பற்றி அவர் விளக்கிக் கூறிய விதம், அவரது ஆராய்ச்சி திறனைப் பறைசாற்றியது. சிந்தனையும், கருத்தும், நகைச்சுவையும் கொண்டதாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.

சந்தியா குமரேஷ்

© TamilOnline.com