தூண்டில்
உன்னிடம் இருந்து
என்னை நான்
ஒளித்து வைக்கிறேன்

அன்பின் வார்த்தைகளை
அணைகட்டித்
தடுத்து வைக்கிறேன்

தேக்கிவைத்த ஆசைகள்
ஆர்ப்பரிக்கும் என்
ஆழ்மனதை
உனக்குச் சிறிதளவும்
காட்டிடக் கூடாதென்று
வெறுப்பின் சுவரை
வானளவு வளர்த்துள்ளேன்..

ஆனால்
என் ஆயத்தங்கள்
அர்த்தமற்றுப் போகின்றன
உன் விழித்தூண்டிலில்
என் இதயம்
சிக்கிக்கொள்ளும்போது!

அருணா சுப்ரமணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com