என்னோடு நீ இருந்தால்...
மு.ரா. சத்யா - மானசா நாயர் நாயக, நாயகியாக நடித்திருக்கும் படம் என்னோடு நீ இருந்தால். உடன் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, அழகு, ஆனந்தராஜ், ரோகிணி, அஜய் ரத்னம், வையாபுரி, மீரா கிருஷ்ணன், சஞ்சய், நடித்துள்ளனர். கே.கே. இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்குகிறார் மு.ரா. சத்யா. "படத்தின் நாயகன் பணக்காரப் பெண்ணான பூஜாவைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. திடீரென்று அவள் காணாமல் போகிறாள். அவளைத் தேடும்போது அவன் வாழ்வில் பல திகில் சம்பவங்கள் நிகழ்கின்றன. பூஜாவைக் கண்டுபிடித்தானா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com