தமிழ்நாடு அறக்கட்டளை: நிதி திரட்ட நடை
ஆகஸ்ட் 19, 2017 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் டென்னஸி, மெம்ஃபிஸ் கிளை சார்பாக 5 கி.மீ. நடை/ஓட்டம் நிகழ்ச்சி நிதி திரட்டும் பொருட்டாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 200 ஆடவர், பெண்டிர், சிறுவர், சிறுமியர் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் மெம்ஃபிஸ் கிளை செயற்குழுவினர் சுவைமிக்க ஆரோக்கியமான தமிழர் உணவு பரிமாறினர். நிகழ்ச்சியில் $2500 திரட்டப்பட்டது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com