கார்கில்


ஒரே ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் படம் 'கார்கில்'. ஜிஷ்னு இப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சிவானி செந்தில். பாடல்களை பாரி இளவழகன், தர்மா எழுத விக்னேஷ் இசையமைத்திருக்கிறார். "தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரேயொரு நடிகர் திரையில் தோன்றும் புதுமையான திரைப்படம் இது. பாடல் காட்சிகளில் மட்டுமே அவருடைய காதலி தோன்றுவார். புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மிகக்குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்புடன் களம் இறங்கியுள்ளேன்" என்கிறார் இயக்குனர். சென்னை-பெங்களூர் சாலையில் காரில் செல்லும் நாயகனுக்கு நாயகியுடன் விரிசல் ஏற்படுகிறது. அது 'கார்கில்' போர் அளவுக்கு உருமாறியது என்பது படத்தின் கதையாம். காதல் என்றாலே போராட்டம்தானே!

அரவிந்த்

© TamilOnline.com