நிகில் நாராயணன் குழலிசை
மே 7, 2017 அன்று, ஹம்சத்வனி சார்பாக, சிமி வேலி சீனியர் சென்டரில் வித்வான் ரமணி அவர்களின் சீடர் நிகில் நாராயணனின் புல்லாங்குழல் கச்சேரி நடைபெற்றது. அவரது சகோதரர் நிர்மல் நாராயணன் மிருதங்கமும், அருண் ராமமூர்த்தி வயலினும் வாசித்தனர்.

கச்சேரி யதுகுலகாம்போஜி வர்ண கீர்த்தனையுடன் ஆரம்பித்தது. தொடர்ந்து கௌளையில் ஒரு கீர்த்தனை. அடுத்து ஆனந்த பைரவியில் "ஓ ஜகதம்பா"வை அற்புதமாக வாசித்தார். பூர்விகல்யாணியில் விஸ்தாரமாகக் கற்பனை ஸ்வரங்களுடன் ஆலாபித்து கரகோஷம் பெற்றார். அடுத்து அதிகமாகப் புழங்கப்படாத மாலவி ராகத்தில் "இது நியாயமா" என்கிற கிருதியை வாசித்தார். பின்னர் லால்குடி ஜயராமன் இயற்றிய ரேவதிராகத் தில்லானாவை அற்புதமாக வழங்கினார்.

இவரது பெற்றோர்கள் சுபாவும் நாராயணனும் முனைந்து பிரபல வித்வான்களிடம் இவர்களைப் பயில வைத்திருக்கின்றனர். பாராட்டுக்கள்.

இந்திரா பார்த்தசாரதி,
சிமி வேலி, கலிஃபோர்னியா

© TamilOnline.com