உறுதி கொள்


இதில் கிஷோர் நாயகன், மேக்னா நாயகி. இயக்குநர் கிருஷ்ணாவிடம் நெடுஞ்சாலை படத்தில் உதவியாளராக பணியாற்றிய ஆர். அய்யனார் படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். பள்ளியில் படிக்கிற காலத்தில் ஏற்படுகிற காதல், சரியான புரிதல், பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சி தானே தவிர, அது காதல் அல்ல; காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. போனால் என்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்பது தான் படத்தின் கதையாம். ரொம்ப தைரியமான கதைதான்.

அரவிந்த்

© TamilOnline.com