கலைஞருக்கு இன்னுமொரு பொன்விழா
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து அவருக்குப் பாராட்டுவிழா ஒன்றை மே 10ம் தேதி அன்று நடத்தவிருக்கிறார்கள். இவ்விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தோடு, இவ்விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்ல இருப்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது என்று கூறியுள்ளதாக தமிழகச் சட்டப்பேரவை தலைவர் இரா. ஆவுடையப்பன் சட்டப்பேரவையில் கூறியிருக் கிறார். மக்களவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார்.

குடியரசு தலைவர் விழாவில் பங்கேற்காத தற்கு அ.தி.மு.க பொதுச்செயலர் நன்றி தெரிவித்துள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com