கணிதப்புதிர்கள்
1. A, B, C என்ற மூவர் வயதின் பெருக்குத் தொகை 72. அவர்களில் Aவை விட Bயின் வயது ஒன்று அதிகம். Cயின் வயது ஆறு வருடம் கழித்து 12 ஆகிறது என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் வயது என்ன?

2. ராமு, சோமுவிடம் 7:9 என்ற விகிதத்தில் சில சாக்லேட்டுகள் இருந்தன. ராமுவின் தாத்தா இருவரிடமும் மேலும் ஐந்து சாக்லேட்டுக்களைக் கொடுத்தார். இப்போது அவை 4:5 என்ற விகிதத்தில் மாறிவிட்டன. ஒவ்வொருவரிடமும் முதலில் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை என்ன?

3. கூடையில் சில மாம்பழங்கள் இருந்தன. சோமு அதில் சம பாதியையும் ஒரு அரைப்பழத்தையும் மூத்த மகனுக்குக் கொடுத்தார். மீதமிருந்த பழங்களில் பாதியையும், ஒரு அரைப்பழத்தையும் இரண்டாவது மகனுக்குக் கொடுத்தார். எஞ்சிய பழங்களில் பாதியையும், ஒரு அரைப்பழத்தையும் மூன்றாவது மகனுக்குக் கொடுத்தார். இறுதியில் கூடையில் எட்டு பழங்கள் மீதமிருந்தன. அப்படியானால் கூடையில் இருந்த பழங்கள் எத்தனை? அவற்றை சோமு எப்படிப் பங்கு போட்டிருப்பார்?

4. 105263157894736842 - இந்த எண்ணை இரண்டால் பெருக்கினால் வரும் விடையின் அதிசயம் என்ன?

5. 7, 5, 8, 4, 9, 3, ...., .... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com