என் ஆளோட செருப்பக் காணோம்
'பசங்க' படத்தில் 'பக்கோடா பாண்டி'யாக நடித்த பாண்டி, இப்படத்தில் 'தமிழ்' என்ற பெயருடன் நாயகனாக அறிமுகம் ஆகிறார். ஆனந்தி நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பால சரவணன், லிவிங்ஸ்டன், ரேகா நடிக்கின்றனர். பாடல்களை விஜயசாகர் எழுத, தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெகன்நாத். நாயகி தொலைத்த ஒரு ஜோடி செருப்பைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் இப்படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து. தொலஞ்ச செருப்பு கடிக்குமா?

அரவிந்த்

© TamilOnline.com