வடக்கை நோக்கி...
இரு மாதங்களுக்கு முன் 'துருவமும் இவருக்கு ஒரு துரும்போ' என்ற செய்தித் துணுக்கு மூலம் உங்களுக்கு அறிமுகமான சரஸ்வதி காமேஸ்வரனைப் பற்றிய இன்னும் ஒரு செய்தி. தென் துருவத்தைத் தொட்டு வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை எல்லோருக்கும் போய்ச்சேர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாட்டிற்குப் பெருமை சேர்க்க இவர் எடுத்திருக்கும் இன்னுமொரு முயற்சி. வடதுருவத்தை நோக்கி! இங்கேயும் இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக் கொடியை நாட்ட பனிச்சறுக்கில் பயணம் மேற் கொண்டுள்ள இவருக்கு உங்கள் சார்பில் தென்றலின் வாழ்த்துக்கள்! வளைகுடா திரும்பி வந்தபின் சரஸ்வதியின் 'இரு துருவ அனுபவங்களையும்' நேயர் களோடு பகிர்ந்துகொள்கிறோம். அதுவரை இந்த சாதனைப் பயணத்தொடரை அவர் குழுவின் வளைதளத்தில் http://www.icetrek.com/index.php?id=729 நீங்கள் கண்காணிக்கலாம். வாழ்த்துச் செய்திகளும் அனுப்பலாம்!

கோபால் குமரப்பன்

© TamilOnline.com