நான்
அலைகளை உள்வாங்கிக் கொண்டு
அமைதி காக்கிறது கடல்.
ஒரு குழந்தை குவித்துச்சென்ற
மணற்கோட்டையை
வட்டமிட்ட நண்டு
ஊர்ந்து மறைந்து போகிறது
மணலுக்குள்.
பறவைகள் பறந்த சுவடேயின்றி
நீண்டு கிடந்த நீலவானத்தின்
கடைசி மேகமும்
காணாது போகிறது.

இப்போது நானும்
வெகுதூரத்தில் மலையும் மட்டும்.
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
நான் கரைந்து மலைமட்டும்
மிஞ்சிக் கிடக்கும் வரைக்கும்.

ராமலக்ஷ்மி,
பெங்களூர்

© TamilOnline.com