வரம்
மகா சமுத்திரங்களின்
அடி ஆழத்தில்,
மலையன்னை பிரசவித்த
நதிகளின் ஓட்டத்தில்,
குளங்களில், குட்டைகளில்,
வட்டக் கிணறுகளில்,
எல்லைகள் கொண்ட ஏரிகளில்,
ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்,
தனக்கான தேவைகளை
நிறைவேற்றிக்கொண்டு
நிறைவாக வாழ்கின்றன மீன்கள்.

நீரிலே பிறந்து
நீரிலே வாழ்ந்து
நீரிலேயே தொலைந்துபோக
வாங்கி வந்த சாபமே
அவற்றின் வரமும்.

ராமலக்ஷ்மி,
பெங்களூர்

© TamilOnline.com