விக்கு விநாயக்ராம் இசைநிகழ்ச்சி
மார்ச் 26, 2017 அன்று ஸ்ரீ காமாக்ஷி கம்யூனிட்டி சென்டர் (சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா) திரு. விக்கு விநாயக்ராம் மற்றும் நியூ ஜெர்சி ஸ்ரீ சுவாமிநாத பாகவதர் குழுவினரின் 'லயம் & குருநாம சங்கீர்த்தனம்' என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீ ஷிர்டி சாயி பரிவார், (மில்பிடாஸ், கலிஃபோர்னியா) அரங்கில் இது நடைபெற்றது.

குழுவினர் காஞ்சி மகாபெரியவர் மீதான பக்திப் பாடல்களை பாடினார்கள். திரு. விநாயக்ராம் குழுவினர் முதலில் 'அறிந்தும் அறியாமலும்' என்ற மகாபெரியவர் மேல் இயற்றிய பாடலுக்குத் தாளவாத்தியங்களை இசைத்தனர். 'காஞ்சி மாநகர் போகவேண்டும்', 'தாமரை மலர் ஒன்று கண்டேன்' போன்ற பாடல்களை இசைத்து ரசிகர்களைப் பரவசமடையச் செய்தனர். விநாயக்ராம் அவர்களின் கடம் தனி ஆவர்த்தனம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. திரு செல்வகணேஷ் விநாயக்ராம் நகைச்சுவையுடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு குழுவினருடன் வாத்தியங்களையும் வாசித்தார்.

நிகழ்ச்சியை ஸ்ரீ காமாக்ஷி சமுதாய மைய நிறுவனர் திரு. சந்திரமௌலி நாராயண சாஸ்திரிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்ட க்ளாரா

© TamilOnline.com