சான் அன்டோனியோ: பொங்கல் விழா
ஜனவரி 28, 2017 அன்று டெக்சஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோ நகரில் பொங்கல் திருவிழாவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக சிறப்பாகக் கொண்டாடினார்கள். அதில் ஜல்லிக்கட்டு நாடகம், சான் அன்டோனியோ தமிழ்ப்பள்ளி மாணவர்களின் குடியரசு பொங்கல் நடனம், பரதநாட்டியம், ஹார்வர்டு தமிழ்ப் பீடம் அமைக்க நிதி திரட்டும் பொருட்டு 'சிவகாமியின் கனவு' என்ற சமூகநாடகம் மற்றும் பல இந்தியப் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

தமிழக கிராமத்துப் பழக்க வழக்கங்களை நினைவுகூரும் விதமாக கூரைவீடு, உறியடி, பொங்கல்பானை, ஜல்லிக்கட்டு மாடு, பொங்கல் வைக்கும் குடும்பம் ஆகியவற்றை விழாக்குழுவினர் செய்திருந்தனர். சங்கத்தின் புதிய தலைவராகத் திரு. இராஜகுரு பரமசாமி அவர்கள் அறிமுகப்படுத்தப் பட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

காளிச்சரண்,
சான் அன்டோனியோ, டெக்சஸ்

© TamilOnline.com