என்னோடு நீ இருந்தால்...


காதல் + திகில் கலந்து உருவாகி இருக்கும் படம் என்னோடு நீ இருந்தால். மு.ரா. சத்யா நாயகனாக நடிப்பதுடன், கதை, பாடல்களை எழுதி இயக்கியிருக்கிறார். நாயகி மானசா நாயர். வெண்ணிற ஆடை மூர்த்தி, ஆனந்தராஜ், அஜய்ரத்னம், வையாபுரி, அழகு, ரோகிணி, மீரா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். கே.கே. இசையமைத்திருக்கிறார். "ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நாயகன் கிஷோர், கோடீஸ்வர பெண்ணான பூஜாவை காதலிக்கிறான். ஒருநாள் பூஜா காணமல் போகிறாள். கிஷோர் அவளைத் தேடி அலைகிறான். அவனைச் சுற்றிப் பல்வேறு திகில் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் மர்மங்களை விறுவிறுப்போடு, மென்மையான காதலைக் கலந்து சொல்கிறது என்னோடு நீ இருந்தால்" என்கிறார் இயக்குநர். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com