மைத்ரி நாட்யாலயா: 'கஜானனீயம்'
நவம்பர் 6, 2016 அன்று மைத்ரி நாட்யாலயா 'கஜானனீயம்' என்ற தலைப்பில் குச்சுப்புடி நடனநிகழ்வை சான் ஹோஸேவில் உள்ள CET Soto அரங்கத்தில் நடத்தியது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் SN கல்லூரியின் கலை மற்றும் தகவல் தொடர்புத்துறைப் பேராசிரியர் திரு. பசுமார்த்தி ராமலிங்க சாஸ்திரி தலைமையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டது. சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியின் சிறந்த நடன ஆசிரியர்கள், ஹூஸ்டன் மற்றும் இந்தியாவிலிருந்து வந்த மற்ற நடனக்குழுவினர், இன்ன பிறரும் இந்தக் கதை நடனத்தில் பங்கேற்றனர்.

திரு. வேதாந்தம் ராகவா (கஜாசுரன்), திருமதி. ஜோதி லக்கராஜு (நாரதர்), திருமதி. ஹிமாபிந்து சல்லா (சிவன்), திருமதி. ஷிர்ணிகாந்த் (பார்வதி), திருமதி. பல்லவி குமார் (விஷ்ணு), திருமதி. சுனிதா பெண்டகண்டி (லட்சுமி), தேஜ கொண்டப்பள்ளி (மாய விஷ்ணு), குமாரி. ஹர்ஷிதா விஜயகுமார் (கணேசர்), முகாரி வித்யா அரேகாபுடி (கார்த்திகேயன்) ஆகியோர் நடித்தனர். உடையலங்காரம், ஆடற்கலை, நடிக நடிகையரின் திறன் என அனைத்தும் இதில் சிறப்பாக அமைந்திருந்தன.

ராஜேஷ்குமார்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com