அதே கண்கள்


கலையரசன் நாயகனாகவும் ஜனனி ஐயர், ஷிவதா நாயர் நாயகிகளாகவும் நடித்திருக்கும் படம் அதே கண்கள். முக்கிய வேடத்தில் பால சரவணன் நடித்திருக்கிறார். முகில் வசனம் எழுத, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ரோகின் வெங்கடேசன். இவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். மும்முனைக் காதலை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். "ஹீரோ பார்வையில்லாதவர் என்பதால் இந்த டைட்டில். முக்கோணக் காதல் இதில் இருந்தாலும், படத்தில் காதலே பிரதானமல்ல. ஒரு சம்பவம் எப்படி அந்த மூவரையும் பாதிக்கிறது என்பதைக் காதலும், திகிலும் கலந்த ரொமாண்டிக் திரில்லராக எடுத்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர். கண்களும் காவடிச் சிந்தாகட்டும்!

அரவிந்த்

© TamilOnline.com