மறையீடு
அச்சுமுறுக்கின் நெளிவுகளில்
கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில்
இட்லிப்பொடியின் உளுந்து ருசியில்
பட்சணங்களை அல்ல...
என் பால்யத்தை ஒளித்து
அனுப்பி இருக்கிறாள்
அம்மா!

தேவி அருள்மொழி அண்ணாமலை,
சிகாகோ

© TamilOnline.com