பரமு


என். மாணிக்கவேலு என்பவர் நாயகனாகவும், சித்ரா நாயகியாகவும் அறிமுகமாகும் படம் 'பரமு'. சந்தியா, ரஞ்சித், பெஞ்மின், கோவை செந்தில் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். ஏழை மாணவன் ஒருவனுக்குக் கல்லூரியில் பயிலும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால், கூடாநட்பு காரணமாக அவன் திசை மாறுகிறான். பணத் தேவைக்காகத் தன் குடும்பத்தை ஏமாற்றுகிறான். அதனால் என்ன ஆனது என்பதைச் சொல்கிறது இப்படம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி மாணிக்கவேலுவே இயக்குகிறார். "ஏமாறாதே ஏமாற்றாதே என்ற மையக்கருவே கதை. பாசமான மகனை நம்பி ஏமாறும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்" என்கிறார் இயக்குநர். இசை: கோவிந்தராஜ்.

அரவிந்த்

© TamilOnline.com