விழிகளில் வெள்ளம்!
விலகிச் சென்றேன்,
விரட்டி வந்தாய்;
வியக்கச் செய்து,
விரும்ப வைத்தாய்!

வினாடிப் பொழுதில்
வெறுத்தும் விட்டாய்;
விரட்டி அடித்து
விலகிச் சென்றாய்.

விதியின் வக்கிரம்
விளங்க வைத்தாய்.
விழுந்ததன் விளைவு
விழிகளில் வெள்ளம்!

சந்தோஷிமா ஹரி,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com