டென்னசி: குறள்தேனீ போட்டி
டென்னசி தமிழ்ச் சங்கம் நடத்திய குறள்தேனீ 2016 போட்டியில் 5 வயதுமுதல் 11 வயதுவரையிலான 12 சிறார் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மிலிந்த் முத்தையா (11 வயது) 73 குறட்பாக்களும், காம்னாஸ்ரீ மோஹன்குமார் (10 வயது) 50 குறட்பாக்களும், கவின் ராஜ்குமார் 26 குறட்பாக்களும் பொருளோடு கூறிப் பரிசுகளை வென்றனர். ஐந்தே வயதான வேதா கிரிஜாரமணன், மீனா முத்தையா ஆகியோரும் தலா 10 குறட்பாக்களைக் கூறி மனங்கவர்ந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பொன்முடிப்பு வழங்கப்பட்டது.

திரு. கோபி சுந்தரேசன், திரு. சுந்தரமூர்த்தி ஆகியோர் நடுவர் பணி ஆற்றினர். மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை ஒட்டி 'நீங்களும் கவிஞர்தான்' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி ஒன்றை டிசம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:
ராஜ்குமார் சுபாஷ், தலைவர்: தொலைபேசி: 201-838-3219; மின்னஞ்சல்: president@tenntamil.org; வலைமனை: www.tenntamil.org

ராஜ்குமார் சுபாஷ்,
டென்னசி

© TamilOnline.com