தொல்காப்பியம் அறக்கட்டளை நிதிக்காக 'நள தமயந்தி'
செப்டம்பர் 10, 2016 அன்று, தொல்காப்பியம் அறக்கட்டளைக்கான நிதிதிரட்டும் முயற்சியாக "நள தமயந்தி" என்னும் நாட்டிய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் தொடங்கிய நாள் முதல் உறுதுணையாக இருந்துவரும் திரு. பால் பாண்டியன் மற்றும் திரு. சீனிவாசன் ஆகியோர் தலைமையில் தொல்காப்பியம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த நிதியை முதலீடாகக் கொண்டு அறக்கட்டளையின் முதல்கட்ட வேலைகள் துவங்கப்படும்.

வரும் தலைமுறைக் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வழிகாட்டுதலாகவும், உறவுகளாகவும் உறுதுணையாக இருந்திட ஒரு வாய்ப்பை உருவாக்குவது இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும். தமிழ்ச்சங்க நிர்வாக அலுவலகம், அவசரநிலை நிதியுதவி, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடம், கல்வி உதவி, நூலகம், பெற்றோர்கள் சந்திக்கும் அறை எனப் பலவகை நோக்கங்களையும் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.

அழைப்பு மணி இல்லாத வீடாகத் தொல்காப்பிய வளாகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சங்கத்தின் இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்யும் பணியில் ஒன்றிணைவோம்.

நன்கொடை வழங்க: www.dfwmts.org

சித்ரா மஹேஷ்,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com