ஜெயமோகன் வசனத்தில் 'கஸ்தூரிமான்'
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'கஸ்தூரிமான்', தமிழில் அதே பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகிதாஸ் தயாரிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படம் முடிவுறும் தறுவாயில் உள்ளது.

பிரசன்னா நாயகனாகவும் மீரா ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கிறார்கள். வழக்கம்போல் காதல், அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை செல்கிறது.

இப்படத்திற்கான வசனம் எழுதுவதன் மூலம் தமிழ்த்திரைப்பட உலகில் நுழைகிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com