தெரியுமா?: சாண்டில்யனின் 'கடல் புறா' ஒலிநூல் வெளியீடு
'பொன்னியின் செல்வன்', 'ரமண சரிதம்' போன்ற ஒலிநூல்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள திரு. பாம்பே கண்ணன் அவர்கள் சாண்டில்யனின் மிகப்பிரபலமானதும், சுவையானதுமான 'கடல் புறா' சரித்திர நாவலை ஒலிநூலாக இயக்கிப் படைத்துள்ளார். ஆகஸ்ட் 4ம் தேதி டாக்டர். நல்லி குப்புசாமி அவர்களால் இது சென்னையில் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் அண்ட் ஃப்ரண்ட்ஸ் (பெங்களூரு C.K. வெங்கடராமன் மற்றும் பாம்பே கண்ணன்) இதனைத் தயாரித்துள்ளனர்.

இரண்டு குறுந்தகடுகளாக வெளிவரும் இந்த ஒலிநூலில் தாசரதி, வேலுசாமி, ரமேஷ், SK ஜெயகுமார், சபாபதி, வனிதா மற்றும் பல நடிகர்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். பின்னணி இசையோடும் சிறப்பு ஒலிக்கலவையோடும் வெளிவரும் இதற்கு விவேக் நாராயண் இசை அமைத்துள்ளார்.

தொடர்புக்கு:
பாம்பே கண்ணன் +91 9841153973; bombaykannan@hotmail.com; venkyckv@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com