ரங்கீலா: சென்னை வெள்ளநிவாரண நடன நிகழ்ச்சி
ஜூன் 18, 2016 அன்று ஓரிகான் மாகாணம் போர்ட்லண்ட் நகரின் நூற்றுக்கும் மேலான இந்திய நடனக்கலைஞர்கள் ஓன்றுகூடி பரதநாட்டியம், மோகினியாட்டம், பாங்க்ரா, பாலிவுட், பெங்காலி போன்ற இந்திய நடனங்கள் மற்றும் ஹிப்-ஹாப், ஃபிளமிங்கோ போன்ற உலக நடனங்களுடன் பத்து வகையான நடனங்களை வடிவமைத்து நடன விருந்தொன்றை வழங்கினார்கள். நிகழ்ச்சியை ஐநூறுக்கும் மேலான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதியனைத்தும் சமீபத்திய சென்னை வெள்ளத்தில் வீடிழந்தவர்களுக்கு AID India நிறுவனம் மூலமாக புதுவீடுகள் கட்டிக்கொடுக்க நன்கொடையாக வழங்கப்பட்டது.

சுபா சிங்காரம்,
போர்ட்லாண்ட், ஓரிகான்

© TamilOnline.com