கவிஞர் குமரகுருபரன்
சமீபத்தில் கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல்விருதைப் பெற்ற கவிஞர் குமரகுருபரன் (43) மாரடைப்பால் காலமானார். பத்திரிகையாளர், ஊடகவியலாளர் எனப் பல பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றிய குமரகுருபரன், அடிப்படையில் கால்நடை மருத்துவர். திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எழுத்தாளராகவும், கவிஞராகவும் முத்திரை பதித்தவர். 'ஞானம் நுரைக்கும் போத்தல்' (கவிதைத் தொகுப்பு), 'இன்னொருவனின் கனவு' (கட்டுரைத் தொகுப்பு), 'பயணிகள் கவனிக்கவும்' (பயணக் கட்டுரை நூல்) போன்ற இவரது நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பான 'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' நூலுக்குச் சிறந்த கவிதைக்கான கனடா இலக்கியத் தோட்ட விருதை வென்றிருந்தார். கனடாவில் விருதைப் பெற்றிருக்க வேண்டிய அதேநாளில் அவர் மரணமடைந்தது துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.



© TamilOnline.com