மிச்சிகன்: உன்னிகிருஷ்ணன் இசையோடு ஓவியம்
ஜூன் 19, 2016 அன்று மிச்சிகனின் மேல்சபரி அமைப்பு, லேக் ஓரையன் பள்ளி வளாகத்தில் மதியம் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை ஒரு புதுமையான நிகழ்ச்சியை வழங்கவுள்ளது. பிரபல பாடகர் திரு. உன்னி கிருஷ்ணன் அவர்கள் ஷியாநாஸ் இசைக்குழுவுடன் வழங்கும் இசை நிகழ்ச்சியில் மிச்சிகனின் பிரபல ஓவியர் திரு. கிரீஷ் நாயர் ஓவியம் வரையவிருக்கிறார். உன்னிகிருஷ்ணன் பல்வேறு தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமான பாடல்களைப் பாடி விருந்தளிப்பார்.

நிகழ்ச்சியில் கிரீஷ் நாயர் வரையப்போகும் ஓவியங்கள் ரசிகர்களுக்கு ஏலம் விடப்படும். மிச்சிகனில் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தைக் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக மேல்சபரி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் ஆலய வடிவிலும் அதே சூழலிலும் கட்டப்பட இருக்கும் இந்த ஆலயம் அமெரிக்காவிலேயே முதல்முறையாக எடுக்கப்பட்டுள்ள திட்டமாகும்.

நிகழ்ச்சி தந்தையர் தினத்தன்று நடப்பதால், நிகழ்ச்சிக்கு வரும் தந்தைகளை கௌரவிக்கும் பொருட்டு 12 மணி மதியம், நிகழ்ச்சி துவங்கும் முன்னர் எல்லோருக்கும் சிறப்பு உணவு வழங்கப்படும்.

வலைமனை: www.melsabari.org
முகநூல் இணைப்பு: facebook.com

மேலும் தகவல்களுக்கும் டிக்கெட் விவரங்களுக்கும்:
ஸ்ரீனி மு, ஸ்ரீனிவாசன் - தொலைபேசி: 248-882-4325

சக்தி சிவராமகிருஷ்ணன்,
மிச்சிகன்

© TamilOnline.com