தெரியுமா?: சாந்தி மாரியப்பன்
இவரது வலைப்பக்கம்: அமைதிச்சாரல் மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன் கதை, கவிதை, கட்டுரை என்று தனது படைப்புத் தளத்தை விசாலமாக வைத்திருக்கிறார். வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம், திண்ணை போன்ற இணைய இதழ்களிலும், குங்குமம், குங்குமம் தோழி, லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா போன்ற அச்சிதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. ‘சிறகு விரிந்தது’ இவரது கவிதை நூல்.

பாரதத்தின் தேசியக்கொடி பற்றிய கட்டுரை பெருமிதம் தருவது. புகைப்படங்களுக்கான இவரது முகநூல் பக்கமும் கண்ணைக் கவர்வதுதான்.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com