இர்விங்: பங்குனி உத்திரம்
ஏப்ரல் 4, 2016 அன்று டாலஸ், இர்விங் DFW இந்துக் கோவிலில் அமைந்துள்ள முருகன் சன்னதிக்கு, பங்குனி உத்திரத்தைக் கொண்டாடினர். சனிக்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் 40 பேர் காவடியுடனும் 50 பேர் பால்குடத்துடனும் பங்கேற்றனர். வந்திருந்த 350க்கும் மேலான பக்தர்களுக்கு மதியம் மகாபிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவின் தொடர்ச்சியாக ஏப்ரல் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு 8.5 மைல் நடைப்பயணமாகச் சென்றனர். சிலர் காலணியின்றி நடந்தனர். இர்விங் சிம்மரன் பார்க்கிலிருந்து காலை 8.30 மணி அளவில் புறப்பட்ட குழுவினர், மதியம் 1 மணி அளவில் கோவிலை அடைந்தனர். இர்விங் போலீஸ்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். கோவிலை அடைந்த பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் பாடியபிறகு, சிறப்பு பூஜை, பிரசாதத்துடன் விழா நிறைவுற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com