TCANC: சித்திரைத் திருநாள்
ஏப்ரல் 16, 2016 அன்று வடகரோலினா தமிழ் கலாச்சார சங்கம் (TCANC) சித்திரைத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடியது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழங்கிய நிகழ்ச்சிகளை 700க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். சிறப்பு அழைப்பின் அடிப்படையில் , மோரிஸ்வில் மேயர் மார்க் ஸ்டோல்மன் மற்றும் சபை உறுப்பினர்மைக்கேல் சிலிங்க் திடீர் விஜயம்செய்து உற்சாகமூட்டினர்.

அச்சமயத்தில் புதிய நிர்வாகக்குழு பொறுப்பேற்றது. வெளியேறும் குழுவினர் வாய்ப்புக்கு நன்றிகூறி, புதிய குழுவை வாழ்த்தினர். நீண்டகால உறுப்பினர்களைப் பொறுத்தவரை, 15 ஆண்டு அனுபவங்களை நினைவுபடுத்திக்கொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு: www.tcanc.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com