தெரியுமா?: கவிஞர் உமா மோகன்
இவரது வலைப்பக்கம்: குரல் கவிதைக்குரல் இவருடையது. அகில இந்திய வானொலியின் புதுவை நிலையத்தில் பணிசெய்கிறார். அன்பையும் பாசத்தையும் உருகிப்பேசும் இவரது குரல், போலித்தனத்தைப் பார்த்தால் ஓங்கி ஒலிக்கவும் தவறுவதில்லை. 'அங்கீகாரத்தின் குரல்' என்ற இவரது கவிதை ரசிக்கத்தக்கது. 'லதாம்மாவின் மரணம்' நிச்சயம் உங்களை ஒரு நிமிடம் யோசிக்கவைக்கும். இவரது கவிதைத் தொகுப்புகள் 'ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்', 'வெயில்', 'டார்வின் படிக்காத குருவி' என்ற தலைப்புகளில் வெளியாகியுள்ளன.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com