அரங்கேற்றம்: ஸ்ரேயா சாகர்லமுடி
மார்ச் 20, 2016 அன்று, லலிதா கான வித்யாலயா மாணவி செல்வி. ஸ்ரேயா சாகர்லமுடியின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் நடைபெற்றது. நாட்டக்குறிஞ்சி வர்ணத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சில கீர்த்தனைகளுக்கு அவர் ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரம் ஆகியவற்றைச் சிறப்பாகச் செய்தார். மங்களத்துடன் கச்சேரி நிறைவெய்தியது.

வி.பி. ராவ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com