ஏப்ரல் 2016: வாசகர் கடிதம்
மார்ச் மாதத் தென்றல் உண்மையில் ஓர் இலக்கியச் சோலையாகவே மணம் வீசுகிறது. 'பாரதி நீ மீண்டும் பிறக்கத் தயார் என்றால் உன்னைச் சுமக்க என் கருப்பை தயார்' என்ற உரத்த சிந்தனையை முழக்கமிட்ட எங்களூர் பன்முகப் படைப்பாளி ஆண்டாள் பிரியதர்ஷினி குறித்த கட்டுரையும், மிகச்சிறந்த உண்மையியல் ஓவியர் இளையராஜாவின் நேர்காணலும் உன்னதமானவை. வாசித்து மெய்சிலிர்த்தேன்.

மிகச்சிறந்த இலக்கியப்பணியைச் செம்மையுற ஆற்றிவரும் 'தென்றல்' இதழுக்கு என் தலைவணக்கமும், தமிழ்வணக்கமும்.

இலக்கியப் பாவலர் கருமலைப் பழம் நீ,
நேப்பர்வில், இல்லினாய்ஸ்

© TamilOnline.com