தெரியுமா?: ஸ்கைப் மூலம் தமிழ்த் திறனாய்வுத் தேர்வுகள்
டாலஸ் நகரைத் தலைமையிடமாக் கொண்டு இயங்கிவரும் www.ilearntamilnow.com இணையதள தமிழ்ப்பள்ளி, ஸ்கைப் (Skype) மூலம் மாணவ மாணவியரின் தமிழ்த் திறனாய்வுத் தேர்வுகள் நடத்துகிறது. தமிழகம் நீங்கலாக உலகமுழுதும் வசிக்கும் குழந்தைகள் இந்த தேர்வில் பங்கேற்கலாம். தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்தத் தேர்வில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் தனித்தனியாக இந்தத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெரும் மாணவர்களுக்கு டாலஸ்வாழ் புரவலர்கள் பால்பாண்டியன், டாக்டர். கீதா பாண்டியன் சிறப்புப் பரிசுகள் வழங்கவுள்ளனர்.

தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: ஏப்ரல் 30, 2016.
இணையதள முகவரி: www.ilearntamilnow.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com