பாரதி கலை மன்றம்: பொங்கல் விழா
ஜனவரி 23, 2016, அன்று ஹூஸ்டன் மாநகரத்தில், பாரதி கலை மன்றம் பொங்கல் விழாவைக் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது. அதில் கேட்டி நகரத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் (3–8 வயது) பொங்கல் விழாவின் சிறப்புகளைத் தங்களது மழலைகலந்த தமிழில் “அஆஇஈ–க்களின் (அமெரிக்கா ஆர்வத்தில இருக்கிற ஈஸ்வரி-க்களின்) ஹூஸ்டன் பொங்கல் அனுபவம்” என்ற நகைச்சுவை நாடகமாக வழங்கினர். இதில் தமது நடிப்பு மற்றும் பேச்சுத் திறனை வெளிப்படுத்தியதோடு, பொங்கல் விழாவைப் பற்றி அமெரிக்காவாழ் குழந்தைகளின் எதார்த்தமான புரிதலையும், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

அவர்களின் திறனை பார்த்து ரசிக்க:


கந்தசாமி வினாயகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com