சியாட்டல்: தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள்
மார்ச் 27, 2016 ஞாயிற்றுக் கிழமையன்று சியாட்டல் தமிழ்ச்சங்கம் சொற்பொழிவு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளை பாத்தல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. 'சொல்வேந்தர்' சுகி சிவம்

தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்தில் வழக்கறிஞர் திருமதி. சுமதி கஸ்தூரி மற்றும் கவிஞர். மணிகண்டன் பிட்சு ஆகியோர் விவாதம் செய்வர். தவிர, சியாட்டல்வாழ் குழந்தைகளின் திருக்குறள் ஒப்பித்தல்

போட்டியும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.

திருக்குறள் ஒப்பித்தல் போட்டியின் சிறப்பம்சமாக 'ஒரு குறளுக்கு ஒரு அமெரிக்க டாலர்' திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதிகக் குறட்பாக்களைப் பொருளோடு சொல்லும் மழலைகளுக்கு சுகி சிவம் அவர்களின்

கரங்களால் பரிசு வழங்கப்படும்.

மேலும் செய்திகளுக்கு: fb.com/seattletamilsangampage/

குணமொழி ஹரிசங்கர்,
சியாட்டல்

© TamilOnline.com