சியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்
சியாட்டில் ரெட்மண்ட் நகரில் இருக்கும் வேதா கோயிலில் 'சியாட்டில் மார்கழி உத்சவம்' இரண்டாவது வருடமாக நடந்தது. ஜனவரி 10ம் நாளன்று, 'மதுரகவீஸ்' என்ற குழு ஆண்டாளின் வாழ்க்கைச் சரித்திரத்தை சங்கீத உபன்யாசமாக நடத்தினர். திருமதி. மயூரவல்லி சந்தானம் உபன்யாசம் செய்ய, பாடல்களை திருமதிகள் நம்ரதா ராஜகோபால், ராஜி ஸ்ரீனிவாசாசாரி, சௌம்யா சாரநாதன் மற்றும் குமாரி. நிரஞ்சனா கண்ணன் பாடினர். திரு. ஜகதீஷ்வரன் (மிருதங்கம்), திரு. சூர்யா (கஞ்சிரா), திருமதி. அபர்ணா ஸ்ரீவத்சன் (வயலின்) ஆகியோர் பக்கம் வாசித்தனர். திருப்பாவை, நாச்சியார் திருமொழி தவிர அபங்கம் போன்றவற்றையும் பாடி பக்திப் பெருக்கில் திளைக்க வைத்தனர்.

'மதுரகவீஸ்' குழுவினரை அழைக்க விரும்புபவர்கள் madurakavees@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

சந்தானம், மயூரவல்லி,
சியாட்டில்

© TamilOnline.com