மேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா
ஜனவரி 15, 2016 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இயங்கிவரும் மேரியட்டா தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் திரு. முரளிதரன் சுந்தரேசன் வரவேற்றுப் பேசினார். குழந்தைகள் வண்ண வண்ண உடையணிந்து வந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மேரியட்டா தமிழ்ப்பள்ளிக் குழுவினர் திருமதி. தீபா ஸ்ரீராம் அவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினர். குழந்தைகள் நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடி தைத்திருநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குழந்தைகளுக்குத் தமிழர் திருநாளின் சிறப்புகளை விளக்கி, "பொங்கலோ பொங்கல்" என முழங்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

உமா பாபா,
மேரியட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com