சென்னைக்காகப் பாடுவோம்
ஜனவரி 23, 2016 அன்று சான் ஹோசே ராஜராஜேஸ்வரி கோவிலில் 'Sing for Chennai' என்ற இசைநிகழ்ச்சியைச் சென்னை வெள்ளநிவாரண நிதி திரட்டுவதற்காக 'Chennai Flood Relief' என்ற லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பு நடத்தியது. சங்கீதா சம்பத் அவர்களின் முயற்சியில் நடந்த இந்த முழுநாள் நிகழ்ச்சியில் விரிகுடாப்பகுதியின் ஸ்ரீகாந்த் சாரி, ரவீந்திரபாரதி ஸ்ரீதரன், ஹெம்மிகே வி. ஸ்ரீவத்சன், நடராஜன் ஸ்ரீனிவாசன், ஹரி தேவநாத், விவேக் சுந்தர்ராமன், கஸ்தூரி சிவகுமார் இன்னும் பல குருமார்களும் சீடர்களும் பங்கேற்று உதவினர்.

சிறப்பு விருந்தினர்களாக சாரடோகா நகர்மன்ற உறுப்பினர் திரு. ரிஷி குமார் மற்றும் அவரது துணைவியார் திருமதி. சீமா குமார் பங்கேற்றனர். இங்கே திரட்டப்பட்ட சுமார் $5623, வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை முன்னின்று சங்கீதா சம்பத் மற்றும் பிரியா ஹரி சிறப்புற ஏற்பாடு செய்தனர்.

பிரியா ஹரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com