TNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நடன நிகழ்ச்சி
பிப்ரவரி 13, 2016 அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு அறக்கட்டளை ஆஸ்டின் கிளையின் சார்பில், அங்குள்ள முன்னணி நடனப்பள்ளிகளான நாட்யாலயா நடனப்பள்ளியின் திருமதி. வினிதா சுப்ரமணியம்,

பவித்ரம் நடனப்பள்ளியின் திருமதி. பவித்ரா இராமதாஸ், சாய் நாட்டிய நிகேதனின் திருமதி. ஸ்ரீலதா மாதுரி, ஸ்ருஷ்டி நடனக்குழு ஆகியோர் இணைந்து ஆஸ்டின் லேனியர் உயர்நிலைப்பள்ளியில் 'Rebuilding

Life' என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் முயற்சிகளின் தொடர்ச்சியாக இது அமைகிறது.

இந்த நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல திட்டங்கள் மூலம் சென்றடைய TNF வழிவகுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவு ஆதரவு தந்து அமைதியும் மகிழ்ச்சியும் பெற்றுச்செல்லுமாறு TNF ஆஸ்டின் அழைக்கிறது.

சோமலெ. சோமசுந்தரம்,
ஆஸ்டின், டெக்சஸ்

© TamilOnline.com