BAFA: திருக்குறள் போட்டிகள்
விரிகுடா கலைக்கூடம் இரண்டு ஆண்டுகளாக திருக்குறள் விழாவைச் சிலிக்கன் வேல்லியில் செவ்வனே நடத்திவருகிறது. 2016ம் ஆண்டிலும் திருக்குறள் போட்டிகளும் பின்னர் விழாவும் விரிகுடாப் பகுதியில் நடைபெற இருக்கிறது.

ஒரு குறளை மனப்பாடமாக ஒப்பித்து அதன் பொருளையும் கூறினால் ஒரு டாலர் பரிசு வழங்கப்படும். குறளின் பொருளைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ கூறலாம். பெரியவர்களுக்கும் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டி நடைபெற உள்ளது. திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக சொல்லின்செல்வர் திரு. சுகிசிவம் அவர்கள் வருகைதந்து சிறப்பிக்க உள்ளார். 80க்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பில் இந்தத் திருவிழா நடைபெற உள்ளது. திருக்குறள் கூறும் அனைத்துக் குழந்தைகளும் டாலர் பரிசை சுகிசிவம் அவர்கள் முன்னிலையில் மேடையில் பெறுவர்.

பங்கேற்க இங்கே பதிவுசெய்க: www.bayareafinearts.org
பதிவுசெய்யக் கடைசி நாள்: மார்ச் 6, 2016
போட்டி நாள்: மார்ச் 19, சனிக்கிழமை
இடம்: ஹார்னர் ஜூனியர் உயர்நிலைப்பள்ளி ஃப்ரீமான்ட்
நேரம்: காலை 9 - மாலை 4 மணி

பரிசளிப்பு விழா:
நாள்: மார்ச் 26, சனிக்கிழமை
இடம்: டப்ளின் உயர்நிலைப்பள்ளி, டப்ளின்
நேரம்: மாலை 4 - 6 மணி

போட்டியாளர் பிரிவுகள்:
5 வயதுக்குக் கீழ்; 6-10 வயது; 11-15 வயது; 16-20 வயது; பெரியவர்கள்.
தொடர்புகொள்ள மின்னஞ்சல்: bafa.thirukkural2016@gmail.com

திருமுடி துளசிராம்

© TamilOnline.com