சங்கர நேத்ராலயா: சிறிய கருணைச் செயல்கள்
செம்டம்பர் 6, 2015 அன்று டாலஸ் மாநகரில் பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த 55 மாணவ மாணவியர், 15 வயது நிரம்பிய ஸகானா பிரபுவின் தலைமையில் 'Small Acts of Kindness 2015' என்ற நிகழ்ச்சியை நடத்தினர். சங்கர நேத்ராலயாவின் இலவச கண்சிகிச்சைக்காக நிதி திரட்டிய இந்த நிகழ்ச்சி, 'Mission for Vision' என்ற வாசகம் எழுதிய பதாகைகளுடன், சங்கர நேத்ராலயாவின் சீருடையில், "We are the World," என்ற பாடலுடன் அற்புதமாகத் தொடங்கியது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் அரங்கில் நிரம்பியிருந்தனர். ஸகானா எழுதி இசையமைத்த பாடலுடன் பல ராகமாலிகைப் பாடல்களும் ரசிகர்களைப் பரவசப் படுத்தின. டாலஸ் மாணவர் ஸ்கந்த முத்தையாவும், மாணவி பிரவீணாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். தவிர, ஓவியம் ஏலத்தின் மூலம் நிதி $305 திரட்டப்பட்டது.

நிகழ்ச்சியின் தலைப்பு 'சிறிய கருணைச் செயல்கள்' என இருந்தாலும், இளையோரின் அன்பு இதனை 'ஞாலத்தின் மாணப்பெரிது' ஆக்கியது என்பதில் ஐயமில்லை.

சிங்கர் பிரபு,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com