வீணையிசை: ராஜேஷ் வைத்யா
அக்டோபர் 3, 2015 அன்று தி ஏபெக்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் பள்ளிக்கூடத்தில் கலைமாமணி ராஜேஷ் வைத்யா வீணையிசை விருந்து படைத்தார். வடகரோலினா தமிழ் கலாசார சங்கம் (TCANC) இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. திரு. மோகனராமன் மற்றும் திரு. ஸ்ரீகணேஷ் மிருதங்கம், திரு. சந்தரஜித் தபேலா, திரு. சாய்ஹரி கடம் வாசித்தனர்.

"ராகவேந்திரா"வில் அவரது திறமை மனதை வருடியது. இளையராஜா, கே.வி. மகாதேவன், ஏ.ஆர். ரகுமான் என்று திரையுலக ஜாம்பவான்களின் திரைப் பாடல்கள் ராஜேஷின் கைவண்ணத்தில் மெய்சிலிர்க்க வைத்தன. ரசிகர்களின் வேண்டுகோளைக் கேட்டவுடன் உடனடியாக வழங்கியது அவர் திறமையின் ஆழத்தைக் காட்டியது. TCANC அமைப்புக்கெனப் பிரத்யேகமாக அவர் இசைத்த 18 நிமிட ஜுகல்பந்தி அபாரம். இறுதியில் வழங்கிய சிந்துபைரவி ராகம், கங்கைப் பிரவாகத்தைப்போல உன்னதமாக இருந்தது.

ஸ்ரீவித்யா ஜெயராம்

© TamilOnline.com