சேது பூமி


இராமநாதபுரத்தை மையமாகக் கொண்டு உருவாகிவரும் படம் சேது பூமி. தமன் நாயகனாகவும், சம்ஸ்கிருதி நாயகியாகவும் நடிக்கின்றனர். சிங்கம் புலி, ஜுனியர் பாலையா, சேரன் ராஜ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், தவசி உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். நந்தலாலா பாடல்களை எழுத, பாரதி – மோனீஸ் என்ற இரட்டையர்கள் இசையமைக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.கே. முனியசாமி. "ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளின் மக்களைப்பற்றி சொல்லும் படம் இது. இவர்களிடம் வறுமையும், கோபமும் அதிகம், அந்த கோபத்திற்கான நியாயம், அவர்களுடைய வாழ்க்கை முறை ஆகியவற்றை படத்தில் விவரித்திருக்கிறேன். மனிதன் தனது உறவுகளையும் உணர்வுகளையும் கொஞ்சம் வேகமாகவே மறந்து வருவது இந்த சமூகத்திற்கு மிகப்பெரும் கேடு என்பதைக் கூறுவதே சேது பூமி படம்" என்கிறார் முனியசாமி. ஆமாம் சாமி!

அரவிந்த்

© TamilOnline.com